திருப்பூர், அக். 26 - நவம்பர் 26ஆம் தேதி நடை பெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் திருப் பூர் முழுவதும் அனைத்து தொழி லாளர்களையும் அணிதிரட்டுவது என்று மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் மாவட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம் சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலை வர் எம்.சந்திரன், மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், கட்டு மான சங்க மாநிலப் பொதுச் செய லாளர் டி.குமார், ஏஐடியுசி செயலாளர் சேகர், துணைத் தலை வர் ஜெகநாதன், எல்பிஎப் நிர்வாகி கள் ரங்கசாமி, ரத்தினசாமி, ஐஎன் டியுசி செயலாளர் அ.சிவசாமி, தலைவர் அ.பெருமாள், எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, முரு கன் எம்எல்எப் செயலாளர்கள் சம் பத், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
நவ.26 ஆம் தேதி நடைபெற வுள்ள போராட்டத்தில், வருமான வரி கட்டும் அளவிற்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்க ளுக்கும் மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் ஒரு முறை 10 கிலோ அரிசி, கோதுமை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை ஆண் டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி நகரங்களுக்கும் விரி வாக்கம் செய்து அதில் வழங்கப் படும் குறைந்தபட்ச கூலியை அதி கரிக்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை, தொழி லாளர் சட்டத் தொகுப்பையும் திரும்பப் பெற வேண்டும். வங்கி காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்ப டுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். ரயில்வே, பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகள், துறை முகங்கள் போன்ற அரசு துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுக ளுக்கு மாற்றுவதை கைவிட வேண் டும்.
அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்களுக்கு உரிய வயது முடிவதற்கு முன்பாக கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். அனை வருக்கும் ஓய்வூதியம் வழங்கப் பட வேண்டும். புதிய ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பனியன் தொழிலாளர்கள் புதிய சம்பள கோரிக்கையை உடனே பேச்சு வார்த்தையின் மூலம் பேசி தீர்வு கான வேண்டும். கட்டுமானம் மற் றும் அமைப்புசாரா தொழிலாளர் கள் நல வாரியத்தை முறைப் படுத்துவதுடன், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.