tamilnadu

img

சாலையை செப்பனிட வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ. 11 - திருப்பூர் மாநகரில் மங்கலம் சாலை யில் சாக்கடைக் கால்வாய் பணியை விரைந்து முடித்து, சாலையை செப்பனிட வலியுறுத்தி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டன. திருப்பூர் மங்கலம் சாலை பழகுடோன் அருகே பூச்சக்காடு பகுதியில் செவ்வா யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலையை செப்பனிடவும், கால்வாய் பணியை விரைந்து முடிக்கவும், குப்பை களை அகற்றவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தெற்கு மாநகரச் செயலாளர்  டி.ஜெய பால், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி. பாலன், ஜி.மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஜி.ரவி, திமுக நிர்வாகிகள் ஆ.அய்யப்பன், தம்பி வெங்கடாசலம், எஸ்.ஆர்.ரமேஷ், ஆர்.விஸ்வநாதன், மதிமுக சார்பில்  முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்தாமணி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றி னர்.