திருப்பூர், ஜூன் 30- மின் கட்டணக் கணக்கீட்டை முறைப் படுத்தி மக்களுக்கு சுமையைக் குறைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பாக ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊர டங்கு உத்தரவால் கடந்த இரண்டு மாத காலமாக மக்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டு மாதத்திற்கும் சேர்த்து மின் கட்டணம் கணக்கீடு எடுக்கப்பட்டு அதை செலுத்துமாறும் மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இந்த மின் கட்டணத்தின் அளவும் மிக அதிகளவு வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே பொது மக்களை வஞ்சிக்காத வகையில் மின் கணக்கீட்டை முறைப்படுத்தி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் கிழக்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாயன்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதேபோல் அவிநாசி ஒன்றியப் பகுதி களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொறியாளர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பி.முத் துசாமி, ஒன்றிய செயலாளர் எஸ். வெங்கடா சலம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதி ஆவாரங்காடு மின்வாரியம் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ரவி தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மின்வாரிய உதவி பொறியாளரிடம் 120க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது.