திருப்பூர், அக்.15- திருப்பூரில் பழுதடைந்துள்ள மங்கலம் சாலையை பெரியாண்டிபாளையத்திலி ருந்து குளத்துப்புதூர் வரை செப்பனிடாமல் அலட்சியமாக இருக்கும் மாநகராட்சி நிர் வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பூர், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தலைமையில் புத னன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலா ளர் செ.முத்துகண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகர செய லாளர் டி.ஜெயபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், வாலி பர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பா.ஞானசேகர், தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், சாலையை சீரமைக்காமல் மெத்த னம் காட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகளை உடனடியாக சீர் செய்து விபத்துக்களை தவிர்த்திட நடவ டிக்கை எடுக்கக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.