tamilnadu

பல்லகவுண்டன்பாளையம் அரசுப் பள்ளியில் கட்டாய வசூல்

திருப்பூர், ஆக. 7 – திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம் பல்லகவுண்டன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதிகளுக்குப் புறம் பாக கட்டாய வசூல் செய்யும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்  தனியார்கள் மீது உடன டியாக நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்ல கவுண்டன்பாளையம் கிளைச் செயலாளர் கே.கண்ணையன் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலருக்கு எழுதியுள்ள கடிதத்தை,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், விவசா யத் தொழிலாளர் சங்க தாலுகா  தலைவர் ஆர்.மணியன், பெற் றோர் சார்பில் கே.கண்ணையன், அர்ஜூனன் ஆகியோர் புதன் கிழமை முதன்மை கல்வி அலுவல கத்திலும், மாவட்ட கல்வி அலுல வர் அலுவலத்திலும் வழங்கினர். இதில் கூறப்பட்டிருப்பதா வது: பல்லகவுண்டன்பாளையம் சரவணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புறத்தை சேர்ந்த சாதாரண கூலி வேலைக்கு செல்லும் விசைத்தறி, கட்டிட, பவுண்டரி தொழிலாளர்கள் மற் றும் விவசாய தொழிலாளிகளின் வீட்டு மாணவர்கள் இங்கு படிக் கின்றனர்.  இவ்வாண்டு பள்ளிச் சேர்க் கையின்போது  6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தலா ரூ.2000-மும், 11ஆம் வகுப்புக்கு ரூ.3750 முதல் ரூ.4100 வரை பாடப்பிரிவுக்கு தகுந்தார்போல் கட்டாய வசூல் செய்துள்ளனர். தனது குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் சேர்க்கை கிடைக் காது என்று அச்சப்பட்டு சிலரும், தலைமையாசிரியர் அவ்வப் போது வெளியில் இருந்து சிலரை அழைத்துவந்து கட்டாயப்படுத்தி மிரட்டியதால் மற்ற பெற்றோர்க ளும் அத்தொகையை செலுத்தி யுள்ளனர்.  சில பெற்றோர்கள் முழுத்தொகை செலுத்த முடியாமல் பாக்கி வைத்துள்ளனர். பணம் செலுத்தியோருக்கு ரசீது வழங்க வில்லை. வகுப்பாசிரியர்களும், தலை மையாசிரியரும் கட்டாயமாக பெற்றோரிடம் பணம் வாங்கி வர வில்லையென்றால் தேர்வு எழுத முடியாது என்று மாணவர்களிடம் கூறி வருகிறார்கள். இதனால் ஏழைப் பெற்றோ ரின் குழந்தைகள் இங்கு சேர்ந்து பயில முடியாமல் தொலைவில் உள்ள பள்ளியில் சேர்ந்து சிரமப் பட்டு வருகிறார்கள். இத்துடன் தற்போது 500க்கும் மேற்பட்ட 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணாக்கர்களிடம் தேர்வு கட்ட ணமாக ரூ.700/-லிருந்து ரூ.1000/-  வரை கட்டாயம் செலுத்தாவிட் டால் தேர்வெழுத முடியாது என  தினமும் சொல்லி அனுப்புகின்ற னர். இது தொடர்பாகப்பெற் றோர்கள் சென்று தலைமையா சிரியரிடம் விசாரித்தபோது, அரசாங்கம் போதிய ஆசிரியர் கள், பணியாளர்கள் நியமிப் பதில்லை. துப்புரவாளர்களும் இல்லை. வெளியில் இருந்து ஆசிரியர், பணியாளர் நியமித்து நடத்துகிறோம். தேர்வுக்கு வினாத் தாள், விடைத்தாள் எதுவும் அரசு வழங்குவதில்லை. அலுவலகத் திற்குத் தேவையான ஸ்டேஷனரி களும் சப்ளை செய்வதில்லை, மின்கட்டணம் உள்பட எந்த நிதி யும் வருவதில்லை. இதற்காக கட் டாயம் வசூல் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பள் ளியை பூட்டிவிட்டு சென்று விடு வோம் என்று கூறினார். அத்துடன் உடனே  போன் செய்து பள்ளிக்கு வெளியே இருந்து சிலரை வரவழைத்து, பள்ளியை நாங்கள்தான் நடத்தி கொண்டுள்ளோம். பணம் செலுத் தாமல் யாரையும் இங்கே படிக்க அனுமதிக்கமாட்டோம் எனக் கூறியதோடு, இதைப் பற்றியெல் லாம் ஊருக்குள் யாரும் தலை மையாசிரியரிடம் கேட்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அரசுப் பள்ளியில் எவ்வித கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கில  வழிக்கல்விக்கு இல்லையென்று அரசு அறிவித்துள்ள நிலையில்,  இங்கு விதிகளுக்கு புறம்பாக கட்டாய கட்டண வசூல் செய்வ தால் பெற்றோர்கள் வேதனையும், விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் பெரும்பாலான நேரங்க ளில் தலைமையாசிரியர் இப்பள் ளியில் இருப்பதில்லை. அரசு விதிக்கு புறம்பாக, அவர் இரு  தனியார் பள்ளிகளில் ஆலோசக ராக பணியாற்றுவதாக தெரிகி றது. இதையெல்லாம் கண்கா ணித்து அரசு விதிப்படி பள்ளியை செயல்படுத்த வேண்டிய பெற் றோர் ஆசிரியர் சங்கமும் இவரின் கட்டாய வசூலுக்கு, முறைகேடு களுக்கு துணை நிற்கிறது. எனவே உடனடியாக நடவ டிக்கை மேற்கொண்டு தலைமை யாசிரியர் மற்றும் அவருக்கு துணை புரிவோர் மீது தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  கட்டாய வசூலுக்கு தடை விதிப்பதுடன், விதிகளுக்கு புற ம்பாக வசூலித்த தொகையை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு திருப்பித் தரவும், பெற்றோர்-ஆசி ரியர் கழகத்திற்கு விதிப்படி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நட வடிக்கை எடுப்பதுடன், அரசுப் பள்ளி கட்டணங்கள் சம்பந்தமாக தெளிவான அறிவிப்பை பள்ளி  முன்பாக வைத்திட வேண்டுமென வும் கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளது.