திருப்பூர், ஆக. 5 - வெள்ளகோவில் பகுதி அருந்ததியர் சமூக இளைஞர்கள் சாதிய தாக்குதலுக்கு உள்ளானார்கள். அவர்கள் மீதே எதிர்த் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரண மாக பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், ஒரேயொரு நாள் அவகாசத் தில் தாராபுரத்தில் சார் ஆட்சியர் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்பந்தப் பட்ட அருந்ததியர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இச்சம்ப வத்துக்கு தலித் விடுதலை இயக்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர் பாக தலித் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் ச.கருப்பையா புதனன்று திருப் பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் காவல் எல்லைக்குட்பட்ட சொரியங்கிணத்துப்பாளையத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி இரவு வி.வி.ஆர்.அப்பு என்பவர் தனது வீட்டின் முன்பாக அருந்ததி யர் சமூகத்தைச் சேர்ந்த விவேகானந்தன், பிரபு, லிங்கேஸ்வரன் ஆகியோரை சாதிய வன்மத்துடன் தாக்கியுள்ளார்.
இது தொடர் பாக வெள்ளகோவில் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. எனினும் இதுவரை குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், மறு நாள் ஜூலை 25ஆம் தேதி மு.பழனிச்சாமி நகரில் வசிக்கும் கோபிநாத் என்பவரின் வீட்டிற்கு மேற்படி விவேகானந்தன், பிரபு, லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்று அங்கிருந்த திரும்புகையில் மறுபடியும் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளக் கோவில் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்கள் காரண மாக வெள்ளக்கோவில் பகுதியில் சாதி பிரச்சனை உருவாகாமல் இருக்க ஆக.5 (புதன்கிழமை) ஆம் தேதியன்று தாராபுரம் சார் ஆட்சியர் முன்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, ஒரேயொரு நாள் முன்பாக, அதாவது செவ்வாயன்று மாலை 5 மணியளவில் மேற்படி அருந்ததியர் வீட்டுக் கதவில் காவல் துறையினர் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பொது ஊரடங்கு அம லில் இருப்பதால் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்கள் வெளியே வராமல் தனிமைப் படுத்திக் கொள்ளும்படி அரசே கூறுகிறது. எனினும், தாராபுரம் சார் ஆட்சியர் குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு 107-ன்படி திடீரென விசாரணைக்கு அழைத்திருப்பது வருந்தத்தக்கது. மேலும், சார் ஆட்சியரின் விசாரணைக்கான கடிதம் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாக சம்பந்தப் பட்ட நபர்களுக்கு வழங்கிட வேண்டும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப் படும் பொழுதெல்லாம் காவல்துறையும், வருவாய்த் துறையும் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் கு.வி.மு.பிரிவு 107-ன்படி விசாரணை நடத்துவ தாகக் கூறுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகும் என்றும் தலித் விடு தலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் ச.கருப்பையாக வேதனை தெரிவித்திருக்கி றார்.