தாராபுரம், அக். 19- கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூ ராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. பேரூராட்சி செயல்அலுவலர் உமாராணி தலைமை யில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தியாகும் டயர், தேங்காய் சிரட்டை, பழைய பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். நோய் தடுப்பு நடவ டிக்கையாக மருந்து தெளிக்கப்பட்டது. மருத்துவ பணியாளர்கள் காய்ச்சல் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தினார்கள்.