திருப்பூர், ஜூன் 16- ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட இளம் வீரர்களுக்கான ஹேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி களில் 11 பதக்கங்களைப் பெற்று இந்திய அள வில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக களரி அணியினருக்கு திருப்பூர் ரயில் நிலையத் தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பகத்சிங் சிலம்பம் களரி பயிற்று மையத்தை ஆசான் வீரமணி நடத்தி வருகிறார். இந்த அணியைச் சேர்ந்த களரி வீரர்கள், வீராங்க னைகள் 25 பேர் தமிழக அணியாக ஹேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங் கேற்றனர். இவர்கள் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி களரிப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தம் 11 பதக்கங்களைக் குவித்த னர். இதன் மூலம் தமிழக அணி இந்த போட்டி யில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில், போட்டி முடிந்து அங்கி ருந்து ரயிலில் புறப்பட்ட களரி அணியினர் வியாழனன்று திருப்பூர் ரயில் நிலையம் வந்த டைந்தனர். ஆசான் வீரமணி தலைமையில் வந்து சேர்ந்த இந்த வீரர்கள், வீராங்கனை களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக மான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளை யாட்டுக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சுப்பிரமணியன், டி.ஜெயபால், ச.நந்த கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா. ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், மாவட்டப் பொருளாளர் ஓம்பிர காஷ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் தௌ.சம்சீர் அகமது, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி முகமது ஜாபர் உள்பட சுமார் 50 பேர் ரயில் நிலைய நுழைவாயிலில் களரி அணியினரை வாழ்த்து முழக்கம் எழுப்பி வரவேற்றனர். ஆசான் வீரமணி உள்பட அணி வீரர், வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் பாராட்டினர். இந்த போட்டியில் தங்கம் வென்ற 8 வயது இளம் வீரர் சுர்ஜித்தின் தந்தையான மார்க் சிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுகா செய லாளர் ஆர்.வி.வடிவேலு உடனிருந்தார். இந் திய அளவில் சாதனை நிகழ்த்தியது போல, களரி போட்டியை சர்வதேச போட்டியாக அங்கீகாரம் பெற வைத்து, அதிலும் பங்கேற்று சாதனை நிகழ்த்த வேண்டும் என்று களரி அணியினருக்கு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் வாழ்த்து தெரிவித்தார்.