திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த பி. மங்கம்மாள், கே. மங்கம்மாள் ஆகிய இரண்டு மூதாட்டிகள் கால தாமதம் காரணமாக பண மதிப்பிழப்புக்கு முன் சேமித்து வைத்திருந்த ரூ.46,000 தொகையை இழந்தனர். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர்களுக்கு உதவ சென்னை கொளத்தூர் எவர்வின் அறக்கட்டளை முன்வந்தது. இதன் நிர்வாகி புருஷோத்தமன் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டிகளின் வீட்டுக்குச் சென்று ரூ. 46,000-க்கான காசோலையை இருவருக்கும் வழங்கினார்.