tamilnadu

தனியார் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் கொசு ஒழிப்புக் குழு நடவடிக்கை

அவிநாசி, ஜன. 30- அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரக்குழுவினரால் தனியார் நூற்பாலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில், பழங் கரை ஊராட்சி தேவம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத் துறையினர் புதனன்று டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொண்டனர். அப்போது தேவம்பாளையத்தில் தனியார் நூற்பாலை நிறுவனத்தில் தண்ணீர் சேமிப்புத் தொட்டி தூய்மையின்றி கொசு புழு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து அவிநாசி ஒன்றிய நிர்வாகத்தினர், நூற்பாலை நிறுவன உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

;