tamilnadu

img

நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 10- திருப்பூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு நிலு வையில் உள்ள பல மாத சம்பள பாக்கியை உடனே வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்கும் வகையில் திட்டத்திற்கான நிதியை அதிக மாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாட்களை ஆண்டுக்கு 250 நாட்களாக உயர்த்திட வேண்டும். விலைவாசி உயர்வுக் கேற்ப தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 15 நாட்களில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு ஆண்டுக்கான வேலை தொகுப்பை ஊராட்சி அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். வேலைக்கான மனு வாங்குவதை தமிழ்நாடு முழுவதும் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். முதியோர் ஓய்வூதியம் வாங்கு வோர்க்கு வேலை இல்லை என்று திருப்பி அனுப்பக்கூடாது. நிலுவையில் உள்ள சம்பள பாக் கியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இக்கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம் பேசினார். விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டத்தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், இடுவாய் ஊராட்சிமன்ற தலைவர் கே.கணேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணி யன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரம், எஸ்.மல்லப்பன், கே.சுப்பிரமணியம், கே.பிரகாஷ், வி.பி.முருகேசன், ஆர்.மாசாணி, எஸ்.பழனிசாமி, வி.தம்புராஜ், கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண் டனர். நிறைவாக மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.துரைசாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக் கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். இம்மனுவைப்பெற் றுக்கொண்ட அதிகாரி கூறுகை யில், வேலைநாட்களை உயர்த் துவது மற்றும் தினசரி சம்பளத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைப்பதாகவும், சம்பளப்பாக்கி உள்ளவர்களுக்கு இரண்டு வாரத்தில் அவரவர் வங்கிக்கணக்குகளில் சம்பளம் வரவு வைக்கப்படும் என்றும், முதியோர் ஓய்வூதியம் பெறு வோர்க்கும் வேலை வழங்கப் படும், பணித்தளங்களில் அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அடுத்த வாரத் தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கூட்டம் நடத்தி வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.