tamilnadu

img

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற ஊத்துக்குளி தாலுகா விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 24 - அத்திக்கடவு - அவிநாசி திட் டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுகா பேரவை வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் ஊத்துக்குளி தாலுகா பேரவை கூட்டம் ஞாயிறன்று செங்கப் பள்ளி என்.பி.கே. தோட்டத்தில் தாலுகா தலைவர் கே.எஸ்.முத்து தலைமையில் நடைபெற்றது. செங் கப்பள்ளி கூட்டுறவு வங்கி இயக்கு நர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வர வேற்றார். மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.வெங்கடாசலம் துவக்கி வைத்து உரையாற்றினார். ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி வேலை யறிக்கை முன்வைத்து பேசினார். விவாதத்திற்கு பின்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவிநாசி – அத்திக்கடவு திட்டப்பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண் டும். விவசாய இலவச மின் இணைப் புக்கு விண்ணப்பித்தோருக்கு உடனே இணைப்பு வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களில் கலப்பு தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். உயர் மின் பாதைகளை, கோபுரங்கள் அமைக்காமல் விவசாய விளை நிலங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கேபிள் வழியாக செயல் படுத்த வேண்டும். விளைநிலங்க ளில் மாத வாடகை, சந்தை மதிப்பில் நான்கு மடங்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள், ஊழியர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். செங்கப்பள்ளி –கைத்த மலை - ஊத்துக்குளி பழுதடைந்த தார் சாலையை உடனே புதுப்பிக்க வேண்டும். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந் துகள் அனைத்தும் செங்கப்பள்ளி, பல்லகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தங்களில் பயணி களை ஏற்றி, இறக்கி செல்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஈரோடு - திருப்பூர் பேருந்துகள் மேட்டுக்கடை பேருந்து நிறுத்தத் தில் நின்று செல்ல வேண்டும். செங் கப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அரசு இ-சேவை மையத்தை உடனே துவக்க வேண்டும் என தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. புதிய தாலுகா நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலுகா தலைவராக எஸ்.கோபாலகிருஷ் ணன், செயலாளராக எஸ்.கே.கொளந் தசாமி, பொருளாளராக கே.வெங்க டாசலம், துணை தலைவராக கே.எஸ்.முத்து, துணைச் செயலாள ராக ஆர்.சுப்பிரமணியம் உள்பட 11 பேர் கொண்ட கமிட்டி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. பேரவையின் நிறைவில் மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் நிறைவு ரையாற்றினார். இப்பேரவை கூட் டத்தில் என்.பி.கருப்புசாமி, ஆர்.சுப்பிரமணி, கே.கண்ணப்பன் உள் பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். தாலுகா பொருளா ளர் கே.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தார்.