திருப்பூர், ஜூலை 16 – கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருப் பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பெருந் திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். “ஓட ஓட விரட்டுவோம் கொரோ னாவை, மீளப்பெறுவோம் உரிமைகளை” என்ற முழக்கத்துடன் புதன்கிழமை நடை பெற்ற இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதி யம் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் முழக்கங் கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ் கரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் எம்.பாலசுப்பிரமணியம் உரை யாற்றினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம், அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைச் செய லாளர் முருகசாமி, தொழிற்பயிற்சி அலுவ லர் சங்க கிளைத் தலைவர் பசுபதி உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த போராட் டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் பெருந்தி ரளானோர் கலந்து கொண்டனர். நிறை வாக அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் திலீப் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகி கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித் துக் கோரிக்கை மனுவை அளித்தனர்.