உடுமலை, அக். 12- மக்காச்சோள படைப்புழுவை அழிப்பது தொடர்பான செயல்விளக்க முகாம் உடு மலைப் பகுதியில் நடைபெற்றது. கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மாணவிகள் இது தொடர் பான செயல்விளக்கமளித்தனர். இதில், கடந்த ஒன்றரை வருடமாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது . இதனை ரசாயன பூச்சிக்கொல்லி மட்டுமே கொண்டு கட்டுப்படுத்த இயலாது. வயலை ஆழ மாக உழுது கூட்டுபுழுக்களை அழிக்க லாம். விதை நேர்த்திசெய்தல், வேப்பம் புண்ணாக்கு இடுதல், வரப்பு பயிர்களாக பயறு வகைகள், சூரியகாந்தி, எள்ளு ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.மேலும், ஒட்டுண்ணிகள் மற்றும் இறை விழுங்கிகளை கவர இனக்கவர்ச்சிப்பொறிகளை வைத்தல் போன்ற ஒருங்கி ணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இனக்கவர்ச்சி பொறியின் பயன் மற்றும் பயன்பாட்டினையும் விவசாயி களுக்கு, கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை வேளாண்மை நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் செயல்முறை விளக் கம் அளித்தனர் . “இனக்கவர்ச்சிப் பொறி படைப்புழுவின் ஆண் அந்துப்பூச்சிக ளைக் கவரும். இதனால் அந்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம் பாதித்து முட்டையிடு தல் தவிர்க்கப்படும். இனக் கவர்ச்சிப் பொறியில் வைக்கப்படும் லூரை 15 நாட்க ளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் “என்று மாணவிகள் விளக்கினர்.