tamilnadu

img

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மின் ஊழியர்கள்

உடுமலை, செப்.26- உடுமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியா ளர் அலுவலகத்தில் புகுந்து பணிகளுக்கு இடையூறு செய்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக் காததை கண்டித்து உடுமலை காவல் நிலையத்தை மின் வாரிய ஊழியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தின் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் ஏரிப் பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், கடந்த செவ்வாயன்று மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் சில நபர்கள் அத்துமீறி புகுந்து அலுவலகப் பணிகளை தடுத்தும், பெண் பணி யாளரிடம் கண்ணியமற்ற முறையிலும் பேசி மிரட் டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  

இந்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் உரிய நடவ டிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளியன்று உடு மலை காவல்நிலையத்தை மின்வாரிய மேற்பார் வைப் பொறியாளர் தமிழ்ச்செல்வி, உதவி செயற்பொ றியாளர் சதீஸ்குமார் தலைமையில் மின்வாரிய அதிகா ரிகள், அலுவலர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;