tamilnadu

img

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு கிராம சபையில் தீர்மானம்

அவிநாசி, ஜன. 26- அவிநாசி அருகே நடுவசேரி ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதாக கிராம சபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அவிநாசி ஒன்றியம், நடுவசேரி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிய ஊராட்சி மன்றத் தலைவரும், துணைவரும், வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தினமான  ஞாயிறன்று ஊராட்சி மன்ற அலுவலகத் தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து கருகன் காட்டுப்புதூர் அரசு பள்ளியில் படிக்கின்ற 20 பெண் குழந்தைகள் செல்வ மகள் திட்டத்தில் சேர ஊராட்சி மன்ற தலைவர்  தனது சொந்தத் தொகை ஐந்தாயிரம் ரூபாயை முதல் மாத தவணை தொகையாக வழங்கினார்.

;