திருப்பூர், மார்ச் 9 - கனவு இலக்கிய வட்டத்தின் மாதக் கூட்டம் பாண்டியன் நகர் சக்தி கட்டிடத்தில் அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் கலாமணி கணேசன் தலைமை வகித்தார். இந்த உழைக்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், சிங்கப்பூர் மணிமாலா மதியழகனின் இவள் சிறுகதைகள் நூல், பொள்ளாச்சி கீதாபிரகாஷின் ஆகுளி கவிதை நூல், சென்னை தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல கவிதை நூல், பாண்டிச் சேரி தமிழ்மொழி கவிதைகள் வெளியீட்டின் நினை வில் வராத கனவுகள் ஆகிய நான்கு நூல்கள் வெளி யிடப்பட்டன. தமிழறிஞர் சொக்கலிங்கனார் சிறப்புரை ஆற்றி னார். சுப்ரபாரதிமணியன், விஜயா, சமூக ஆர்வ லர்கள் மோகன்ராஜ், சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கனவு இலக்கிய வட்டம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.