திருப்பூர், நவ. 18 - ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதி இருவரை சாதி வெறியர்கள் வெட்டிப் படு கொலை செய்த நிலையில், அவர்க ளது குடும்பத்தாரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் ாமை ஒழிப்பு முன்னணி நிர்வா கிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா சிட்டுப்புள்ளபாளை யத்தில் வசித்து வந்த அருந்த தியர் சமூகத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மனைவி அருக்காணி. இவர்களது மகள் மேனகா (எ) மல்லிகேஸ்வரி. கடந்த 13ஆம் தேதி இரவு அதே பகுதியில் ஆதிக்கச் சாதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தனது நண்பர்க ளுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு குடிபோதையில் மேனகாவை தவறாக கேலி பேசி ரகளையில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து ராமசாமி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட அனைவ ரையும் சமாதானம் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர். இதன்பின் கோபத்தில் வீட்டிற்கு சென்ற சூர்யா, பின்னர் நடு இரவு ஒரு மணி அளவில் ராமசாமியின் வீடு தேடி சென்று, கணவன் மனைவி இருவரையும் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜ யராகவன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் பாலசுப்பி ரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்மு கவள்ளி, மொடக் குறிச்சி கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், தூய்மைக் காவலர் சங்கத் தலைவர் வீரகுமார் மற்றும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த லோகு ஆகியோர் செவ்வா யன்று சிட்டுப்புள்ளபாளை யத்தில் உள்ள பாதிக்கப்பட்டோர் குடும்பத்தாரின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு, கொலை செய்யப்பட்ட ராமசாமி, அருக் காணி தம்பதியின் குடும்பத்தைச் சேர்ந்த யுவராஜ், பூபதி, மகள் மேனகா ஆகியோருக்கு நேரில் ஆறுதல் கூறினர். இதன்பின் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், குடி போதையில் ரகளையில் ஈடுபட் டவர்கள் மீது புகார் அளித்தவுடன் காவல் துறையினர் உரிய நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக வெறுமனே அந்த நபர் களை சமாதானம் செய்து அனுப்பி விட்டுள்ளனர். காவல் துறை யின் அலட்சியப் போக்கின் கார ணமாகவே இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற் றிருக்கிறது. எனவே போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்று பணியில் இருந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள சாதிய சக்திகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . அத்துடன், மாநில அரசு ராமசாமி குடும்பத் தில் உள்ள படித்த இரண்டு மகன் களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.