tamilnadu

தொரவலூர்: குளத்தை மேம்படுத்த பனை விதை நடவு

அவிநாசி, அக்.8- பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் தொடர்ந்து 15 ஆவது வாரமாக கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே தொரவ லூர் ஊராட்சிக்கு உள்பட்ட குளப்பகுதிகளில் நீராதாரத்தை மேம்படுத்தும் விதமாக கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் பனை விதை நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாரத்தில் ஒருநாள் நடைபெறும் இந்நிகழ்சி யில், பொதுமக்களும் தங்களை இணைத்துக் கொண்டு பனை விதைகளை நட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. மேலும், தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி வாகை, இலுப்பை, மருது, கருக் காலி, வேம்பு, புங்கன், ஈட்டி, பூவரன், நொச்சி, ஆலாமரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட் டன. இந்நிகழ்ச்சியில் தொரவலூர் ஊராட்சி மன்றத் தலை வர் தேவகி சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.