திருப்பூர், அக்.11 - புதிய சம்பள ஒப்பந்தப் பேச்சுவார்த் தையை தொடக்க வலியுறுத்தி அக்டோபர் 20 ஆம் தேதியன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் பிஎன் ரோடு ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி பனியன் சங்கப் பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை வகித்தார். இதில், ஏ.ஜெக நாதன் ஏஐடியுசி, சிஐடியு பனியன் தொழிலா ளர் சங்கத்தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செயலாளர் ஜி.சம்பத், எல்பிஎப் பனியன் சங்கச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் பூபதி, ஏடிபி பனியன் தொழிலாளர்சங்கச் செயலாளர் குணசேக ரன், ஐஎன்டியுசி சங்கச் செயலாளர் அ.சிவ சாமி, சங்கத் துணைத் தலைவர் வி.ஆர்.ஈஸ் வரன், எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோகரன், துணை செயலாளர் பெருமாள், எச்எம்எஸ் பனியன் சங்க செயலாளர் முத்து சாமி, துணைச் செயலாளர் கவுதமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பனியன் தொழிலாளர் களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய சம்பளம் உள்ளிட்ட கோரிக்கை குறித்து அனைத்து சங்கங்களும் ஒருமுக மாக கோரிக்கை கொடுத்தும் இதுவரை முத லாளி சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
கொரோனாவை கார ணம் காட்டி தள்ளி வைக்கப்பட்ட பேச்சு வார்த்தை ஊரடங்கு முடிவடைந்து தொழிற் சாலைகளில் 100 சதம் தொழிலாளர்கள் வேலை செய்யலாம் என்று அறிவித்த பின்பும், இன்றளவிலும் பேச்சுவார்த் தைக்கு அழைக்காமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. எனவே உடனடியாக பேச்சுவார்த் தைக்கு அழைத்து சுமூகத் தீர்வு காண முன் வர வேண்டும் எனவும், தற்போது வரை ஏறி யிருக்கிற விலைவாசி உயர்வால் பெரும் சிரமத்தில் இருந்து வரும் பனியன் தொழி லாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைப்பதற்கும், காலம் கடத்தாமல் தீர்வு காண முன்வர வேண்டுமென முதலாளிகள் சங்கங்களை அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக் டோபர் 20 ஆம் தேதியன்று அப்பாச்சி நகரி லுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய் துள்ளன.