திருப்பூர், ஜூன் 21- மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை வதைப்பதைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 24ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் ஆர்ப் பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கட்சி அலுவலகத்தில் சனியன்று மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் குடும்பத்துக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரண நிதி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு நெருக்க டியை அதிகரிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை களைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்வ துடன், மக்கள் தலையில் சுமைகள் அதிகரிக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் அபரிமிதமாக விதிக்கும் வரி களைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மின் கட்டணத்தை அபரிமிதமாக வசூலிப்பதி லேயே குறியாக இருக்கிறது. பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதும், மின் கட்டண நிர்ணயம் மற்றும் வசூலிக்கும் நடவடிக்கையில் உரிய நிவாரணம் வழங்கவோ, கால அவகாசம் வழங்கவோ மாநில அரசு மறுத்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் மின் கட்டண வசூல் நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளும் ஜூன் 24ஆம் தேதி புதனன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவுசெய்துள்ளது.