tamilnadu

செப்.5ல் திருப்பூரில் ஐந்து மையங்களில் ஆர்ப்பாட்டம் சிஐடியு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு

திருப்பூர், ஆக. 29 - செப்டம்பர் 5 ஆம் தேதி திருப்பூர் மாவட் டத்தில் சி.ஐ.டி.யு, த.வி.ச, வி.தொ.ச. சங்கங் களின் சார்பில் கிராம நிர்வாக அலுவலகங்க ளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய் யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மாவட்டத் தலை வர், செயலாளர் உள்ளடங்கிய கூட்டம் சனி யன்று காணொளி முறையில் நடைபெற் றது.

இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.சுப்ரம ணியம், மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங் கம், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கொரோனா ஊரடங் கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்க ளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணமாக வழங்க வேண்டும். கிராமப்புற தேசிய வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை யும், நாளொன்றுக்கு ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். மின்சார திருத்தச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள், பண்ணை வர்த்தகம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகிய சட்டங்கள் திரும் பப் பெற வேண்டும்.

தொழிலாளர் நலச்சட் டங்கள் முடக்கம், பொதுத்துறை தனியார் மய நடவடிக்கைகளைக் கைவிட வேண் டும் என வலியுறுத்தி தனிமனித இடைவெளி யைப் பின்பற்றி திருப்பூர் அவிநாசி ஊத்துக் குளி, பல்லடம், பொங்கலூர், காங்கேயம்,  வெள்ளக்கோயில், தாராபுரம், குண்டடம், மடத்துக்குளம், உடுமலை, குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் தலா 5 மையங் களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.