அவிநாசி, செப்.19- அவிநாசி அருகே மடத்துப்பாளை யம், செம்மாண்டம்பாளையம் சாலையை மீண்டும் அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியத்திற்கு உட் பட்ட மடத்துப்பாளையம் மாகாளி யம்மன் கோயிலில் இருந்து செம் மாண்டம்பாளையத்திற்கு செல்லும் சாலை, வளைவாக உள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை இருந்து வந்தது. ஆகவே, இப்பகுதியை சீர மைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சாலையை சீரமைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை, கடந்தாண்டு ஒருங்கிணைந்த சாலை உள்கட் டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.73 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து நில அளவீடு செய்யும் பணி முடிவடைந்து, தார்ச் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணி துவங்க இருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் தற் போது திட்டமிட்டுள்ளபடி சாலை அமைக்கப்பட்டால் மழைநீர் வெளி யேற வழியின்றி மயானத்துக்குள் புகுந்து விடும் என சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால், சாலை அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில், ஏற்கனவே பயன் பாட்டில் உள்ள சாலையையே விரி வாக்குவது, வளைவுப் பகுதிகளில் வேகத்தடை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி புதனன்று வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அப்பகுதி பொதுமக்களை நேரடியாக சந்தித்தனர். இதில், பணி துவங்குவதற்காக, ஏற்கனவே பயன் பாட்டில் உள்ள சாலையை மீண்டும் முழு அளவீடு செய்து வரைபடம் தயா ரித்தபின் சாலை அமைக்கும் பணி யைத் துவங்குவது என முடிவு செய் யப்பட்டுள்ளது.