tamilnadu

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 10- திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றி யத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடைபெற்றுள்ள பல  லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடுகள் மீது நட வடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலா ளர் சிவசாமி வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:  பொங்கலூர் ஒன்றியத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ்  யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகட்டித் தரும்  பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 2016-17 மற்றும் 2017-18 ஆம்  ஆண்டுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் பெரு மளவு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. குறிப்பாக, வீடு கட்டுவ தற்கான அடிப்படை கட்டுமானப் பணிகள் கூட துவக்கப்படாமல், திட்டத்திற்கான முழுத்தொகையான தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஏராளமான பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பல பயனாளிகளுக்கு வீடு கட்டத் தேவை யான கம்பி, சிமெண்ட் வழங்கப்பட்டுள் ளதாகவும், கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.  எனவே, இத்திட்டத்தில் அதிகாரிகளின் துணையோடு பெருமளவு ஊழல் முறை கேடு நடைபெற்றுள்ளது என்பதை ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மேலும், அலகுமலை ஊராட்சி சேமலைக் கவுண்டம்பாளையத்தில் அம்மா விளை யாட்டு மைதானம் அமைக்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு மைதான தளம் அமைக்கா மலேயே பெரும் தொகை செலவிடப் பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே, இத்தகைய ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியக்குழு சார்பில் கேட்டுக்  கொள்ளப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.