tamilnadu

விவசாயிகள் மீது காவல்துறை அத்துமீறி தாக்குதல் சிபிஎம் திருப்பூர் மாவட்ட குழு கண்டனம்

அவிநாசி, ஆக.29- பல்லடம் அருகே விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் அத்து மீறி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு  கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கூட்டம் புதனன்று அவிநாசி கங்கவர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், எம்.என்.எஸ்.வெங்கட் ராமன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் வாவி பாளையத்தில் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதியில் விளை நிலத்திற்குள்   திருப்பூர் மாவட்ட காவல் துறை   கூடுதல் கண்காணிப்பாளர் குண சேகரன் தலைமையில்  நூற்றுக்கும் மேற் பட்ட காவல்துறையினர் உயர் மின் அமைக்கும் பணிக்கு ஆதரவாக குவிக்கப் பட்டுள்ளனர். அப்போது   காவல்துறை யினர் அத்துமீறி விளை நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்தும், விவசாயிகள் மீது அத்துமீறி தாக்குதலும் நடத்தினர். குறிப்பாக, பெண்களை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதோடு, குழந்தைகளையும் விட்டு வைக்காமல் தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி  இலவச  மின்சாரத்தை ரத்து செய்வோம், கஞ்சா  வழக்குப் பதிவு செய்வோம் என விவசாயி களை காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். இதேபோல், அவிநாசி, பல்லடத்தில் உயர் மின் கோபுரம் பணிகள் நடைபெறும்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் செல் போன்களை பறித்துக் கொண்டதுடன் விவ சாயிகள் மிரட்டப்பட்டுள்ளனர்.  மேலும் அவிநாசியில் சில நாட்களுக்கு  முன்பு விவசாய தோட்டத்தில் கேபிள் வயர் திருடிய பெண்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத் தனர். அப்பெண்கள் மீது எந்தவித வழக்கும் பதியாமல், விசாரணையும் நடத்தாமல் விடுவித்துள்ளனர். இதேபோல், போக்கு வரத்து காவல்துறையினர் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை அலைக்கழிப்பது, அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதுடன், பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வரு கின்றனர்.  ஆகவே, இத்தகைய செயல் களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதேபோல் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை  உடனே துவக்க  வேண்டும். தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.   திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனையை, அரசு மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். முத்துப்புதூர் அரசு பள்ளியை இடமாற்றம் செய்யக்கூடாது. பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.