tamilnadu

img

நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு சேதம் காவல் துறையினர் தீவிர விசாரணை

அவிநாசி, ஜூன் 6- அவிநாசி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித் ததில் வீட்டின் சுவர் சேதம் ஏற்பட்டது. அவிநாசி புனித தோமையார் காலனியை சேர்ந்த வர் ராஜேந்திரன் (45).   ஆட்டோ ஓட்டுநரான  இவருக்கு மனைவி,  இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் தனது வீட்டின் அருகே இருக்கும் வின்சன்ட் (70) என்பவரது  வீட்டு  கூரையின் மீது வனவிலங்குகளை வேட்டை யாடவும், விரட்டவும் பயன்படுத்தும் அவுட்டு  காய் எனப்படும் நாட்டு வெடி குண்டை காயவைத் துள்ளார்.

இந்நிலையில், சனியன்று காலை  ராஜேந்திரன் மனைவி துணியை காயப்போடும் போது தவறுதலாக கூரையின் மீது காய்ந்து  கொண்டிருந்த நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்தது.  இதில், வின்சன்ட் வீட்டு கூரையில் சில ஓடுகள் சிதறியதோடு, சுவற்றில் லேசான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த அவிநாசி காவல் துறையினர் ராஜேந்திரனை கைது  செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜேந்திரனுக்கு ஈரோடு மாவட்டம் தாள வாடியில் பாதுகாக்கப்பட்ட வனம் அருகே 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  இத்தோட்டத்தில் வன விலங்குகள் விளைச்சலை சேதப்படுத்துவதை தடுக் கும் விதமாக அவைகளை விரட்டவே இந்த வெடிகள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப் பினும் அவரிடம் காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.