திருப்பூர், மார்ச் 15- திருப்பூர் அருகே சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் என்எஸ்எஸ் சார்பாக கல்லூரி நுழைவு வாயிலில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் கொரோனா வைரஸ் கிரு மிகள் எவ்வாறு பரவுகிறது, பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை விரிவாக மாணவர்களுக்கு எடுத் துக் கூறினார். இதைத்தொடர்ந்து மாணவ செயலர்கள் பேரரசு, சந் தோஷ், சந்தீப், காமராஜ் ஆகியோர் மாணவர்களுடன் குழுக்களாகப் பிரிந்து கொரோனா வைரஸ் தாக்கு தலிலிருந்து பாதுகாத்துக் கொள் வது என செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். கல்லூரி முதல்வர் தீபா இந்நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு கை கழுவுதலின் அவசியம், நோய் தொற்று குறித்து பயிற்சி ஆசிரியர்கள் ஜெயபிர காஷ், ஜெய்கணேஷ் ஆகியோர் விளக்கினர். நிகழ்ச்சியின்போது நூலகர்கள் வீ.கணேசன், மகேந்தி ரன், பிரமோத், அருள்மொழி, செல்வராணி ஆகியோர் உடனி ருந்தனர்.