tamilnadu

img

கொரோனா: வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் மற்றும் வேப்பந்தலை

அவிநாசி, மார்ச் 23- அவிநாசி அருகே எம்.நாதம்பாளையம்  பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வீடுகளின் முன் புறம் மஞ்சள் தண் ணீர் மற்றும் வேப்பம் தலை வைக்கப்பட் டது.  கொரோனா வைரஸ் உலகையே அச்சு றுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு நடைபெற்றது. மேலும், தமிழகத் தில் செவ்வாய் (இன்று) மாலை 6 மணி முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அவிநாசி ஒன்றியம், நம்பியாபாளையம் அருகே எம்.நாதன்பா ளையம் என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இக்கிராம மக்கள் வைரஸ் கிருமிகளை ஒழிக்க மாட்டுசாணம் மற்றும் மஞ்சள் நீர் தெளித்து வருகின்றனர். மேலும் வீட்டு வாசல்களில் பாத்திரத்தில் மஞ்சள் தண்ணீ ருடன் மிளகாய், வேப்பம் இலை வாசலில் வைத்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இது மூதாதையர் பின்பற்றிய முறை மஞ்சள் மற்றும் வேப்பந்தலை நோய் முறிக்கும் சக்தி கொண்டவையாக இருக் கின்றது. காலப்போக்கில் இதையெல்லாம் பொதுமக்கள் மறந்துவிட்டனர். கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையுமான இவைகளை அனைத்து  பொதுமக்களும் பின்பற்ற வேண் டுமென கூறுகின்றனர்.