tamilnadu

கொரோனா: ஹோமியோபதியில் மருந்து கண்டறிய வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 9 – நாடு முழுவதும் பரவிவரும் கோவிட் -19 வைரஸூக்கு தடுப்பு மருந்து உள்ளதாகவும், ஹோமியோபதி, சித்தா மருத்துவர்களைக் கொண்டு கோவிட்- 19 வைரஸூக்கு மருந்து கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும் என்று திருப்பூரின் ஓய்வு பெற்ற அரசு ஹோமியோபதி மருத்துவர் கே.கிங் கூறினார். திங்களன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் மருத்து வர் கே.கிங் கூறியதாவது: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது கோவிட்-19 வைரஸ்.  இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தடுப்பு மருந்து உள்ளது. இதனை சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹோமியோபதி, சித்தா, ஆயுர் வேத மருத்துவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்.  கோவிட் -19 வைரஸூக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தடுப்பு மருந்து உண்டு. வேறு எங்கும் தடுப்பு மருந்து இல்லை யெனும்போது,  மத்திய அரசாங்கம் இதைப் பற்றி ஆலோ சிக்க  முன்வர வேண்டும். மர்மநோய் தாக்கத்தில் இருந்து மனிதர்கள் காப்பாற்றப் படுவார்கள். பிறந்த குழந்தைக்கும் தாய்ப்பாலில் கூட இந்த மருந்தை வழங்கலாம். ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேத  மணிப்பூர், தெலங்கானா மாநிலங்களில் கோவிட்-19க்கு அரசு ஹோமியோபதி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அவர்களைப் போல் தமிழகத்திலும் நாமும் ஹோமி யோபதி மருத்துவ மருந்தை வழங்க வேண்டும். மாற்று மருந்துக்கு அரசு பரிந்துரை செய்ய வேண்டும். இது தொடர் பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கும் தெரியப்படுத்தி இருப்பதாக மருத்துவர் கிங் கூறினார்.