tamilnadu

img

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக - கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூலை 13 - கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்ப டுத்திடக்கோரி அவிநாசியில் ஐந்து இடங்களில் சிஐடியு கட்டிட கட்டுமான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக் கும் மாதம் ரூ. 7,500 வழங்கிட வேண்டும். கட்டிட கட்டு மானத் தொழிலை பாதுகாத்திடுவதோடு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். மணல், கருங்கல் எடுப்பதில் கட்டுப்பாட்டை ரத்து செய்திட வேண்டும். கட்டுமான நல வாரிய பணப் பயன் களை உயர்த்தி வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அவிநாசியில் ஐந்து இடங்களில் சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில், கட்டிட கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜ், சிஐடியு மாநில துணைத்தலை வர் சந்திரன், அவிநாசி ஒன்றிய செயலாளர் கனகராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், பழனிச் சாமி, குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.