tamilnadu

img

பணிச்சுமையால் உயிரிழந்த அஞ்சல் ஊழியருக்கு இரங்கல்

திருப்பூர், ஜூன் 1 – பணிச்சுமை காரணமாக உயிரிழந்த அஞ்சல்துறை ஊழி யர் சி.எஸ்.கிரண் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருப் பூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பாக மத்திய, மாநில  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர் சங் கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்புக்குழுச் செயலாளர் முகம்மது ஜாபர் தலைமை ஏற்றார். அஞ்சல் ஓய்வூதியர் அமைப்பு சார்பாக ஏ.ராஜேந்திரன், பிஎஸ்என்எல் ஊழி யர்கள் மாநிலத் துணைச் செயலாளர் எஸ். சுப்ரமணியம், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கனகராஜா, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகி ப.சௌந்தர பாண்டியன், ஆர்எம்எஸ் சங்கத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி உரை நிகழ் த்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.