tamilnadu

img

திருப்பூர் நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு முகாம்

திருப்பூர், ஏப்.10-திருப்பூர் நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி தலைமை வகித்து மாவட்ட சமரச மையத்தில் சமரசர்களாக உள்ள 23 வழக்குரைஞர்களுக்கு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பேட்ஜை வழங்கிப் பேசினார்.இதைத் தொடர்ந்து, சமரச மையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து சமரச கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெ.பி.ஜெயந்தி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன், நீதிபதிகள் மோகனரம்யா, கவியரசன், பழனி, உதயகுமார், நித்யகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;