திருப்பூர், செப். 1- திருப்பூரில் பணியின் போது இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர், சந்திராபுரத்தில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வணங்காமுடி என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி இரவு நேர பணியின் போது மாரடைப்பால் இறந்து விட்டார். இவருக்கு நிறுவனத்தினர் இஎஸ்ஐ பதிவு செய்திருந்தனர். இதனால் அவரது மறைவையடுத்து மனைவிக்கு இஎஸ்ஐ நிறுவன கிளை மேலாளர் முன்னிலையில், மனிதவள மேம்பாட்டு அலுவலர் இழப்பீடாக ரூ.88 ஆயிரத்து 388-ஐ வழங்கினார். மேலும் மாதம் ரூ.7 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவையும் வழங்கினார்.