tamilnadu

img

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

அவிநாசி, ஜூலை 27- சேவூரில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு சனியன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் சேவூர் தேவேந்தர் நகர் பகுதியில் நடை பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். இதில் பெண்கள் பணிபுரி யும் இடத்தில் பாலியல் துன்புறத்தலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும், இரவு நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற நிலை, நகைப் பறிப்பு,  பொது இடங் கள், பேருந்து உள்ளிட்டவற்றில் நடைபெறும் குற்ற சம்ப வங்களை தடுக்க காவலன் செயலி உபயோகிப்பது குறித் தும் விளக்கப்பட்டது.

;