இரண்டு கிராம நிர்வாக அலுவலகம் ஒன்றிற்கு மட்டுமே அதிகாரம் அவதியுறும் பொதுமக்கள்
உடுமலை, ஜூன் 15- உடுமலை தாலுகாவில் இரண்டு கிராம அலுவ லகத்தில் ஒரு அலுவலருக்கு மட்டுமே பாஸ்வேடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறகின்றனர். உடுமலை தாலுகா, கண்ணமநாய்கனூர் கிராமத்தில் இரண்டு கிராம நிர்வாகமாக பிரிக்கப்பட்டு, இரண்டு அலு வலகம் மற்றும் தனித்தனியாக அலுவலர்கள் உள்ளனர். பொது மக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டி சான்றி தழ்களை பெற இணைய வழியில் விண்ணப்பித்தால் சரியான நேரத்தில் கிடைப்பது இல்லை . இது குறித்து பொது மக்கள் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் கேட்டால், இங்கு உள்ள இரண்டு அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டுமே பதிவு எண் ( USER ID) பாஸ்வேடு கொடுக் கப்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்க முடியாமல் உள்ளது. எனவே வட்டாட்சியர் உடனடியாக தலையீட்டு, இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தனித்தனி யாக பதிவு எண் ( USER ID) பாஸ்வேடு வழங்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரி மாணவர் படுகொலை
அவிநாசி, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் அரசகுளத்தை சேர்ந்தவர் அகஸ் டியன் (20). இவரது உறவினரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் ஜேசுராசு (50). இவரது மகன் பிரான்சிஸ் வல்லரசு (20). இவர்கள் மூவரும் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூரில் தங்கியுள்ளனர். இதில் அகஸ்டியன் அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் பிஎஸ்சி (கணிதம்), பிரான்சிஸ் வல்லரசு பிகாம் (சிஏ) படித்து வந் தனர். ஜேசுராசு சமையல் வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு ஜேசுராசு வேலை யிலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் அகஸ்டியன் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவிநாசி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில் அகஸ்டியனை, பிரான்சிஸ் வல்லரசு கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. தப்பியோடிய பிரான்சிஸ் வல்லரசை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.