திருப்பூர், அக். 17- திருப்பூர் மாநகராட்சி, ராயபுரம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு எண்: 47 ராயபுரம் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவு, கழிப்பறை வசதி, குடிநீர், தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு மேற் கொண்டார். அங்கு தங்கி பயின்று வரும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதே போல் விடுதியினை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவ, மாணவியர் களிடம் தங்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி வகுப்பறையின் பழுதடைந்துள்ள மேற் கூறையினை சீரமைக்குமாறு மாநகராட்சி அலுவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, ராயபுரம் பகுதியில் அமைந் துள்ள நியாய விலைக்கடையில் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டு வரும் அரிசி, பாமாயில், சர்க்கரை, கோதுமை, மைதா மற்றும் பருப்பு வகைகளின் தரம் மற்றும் அளவு ஆய்வு செய்தார். அங்கு வந்திருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர்கள் தங்கும் விடுதியில் திடீர் ஆய்வு மேற் கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்கு தங்கி பயிலும் மாணவி யர்களிடம் உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதி களும் தங்குதடையின்றி கிடைக்கப்பெறுகிறதா எனவும் கேட்டறிந்தார். மேலும், மாணவியர்களின் கோரிக்கை களை விரைந்து மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.