tamilnadu

img

கூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, அக்.24- உடுமலை சித்தகோட்டை பகுதி யில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட  தொழிலாளர்களுக்கான கூலியை  தராமல் ஏமாற்றிய கட்டிட ஒப்பந்த தாரரை கைது செய்யக்கோரி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   திருப்பூர் மாவட்டம், உடுமலை காந்திசவுக் நக்கீரன் வீதியைச் சேர்ந்தவர் கட்டிட ஒப்பந்ததாரர் வெங்கடேசன். இவர் உடுமலை சித்தகோட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு ஒபந் தம் பெற்று, கட்டுமானப் பணிகளை செய்து வந்தார். அதில் ஏராளமான தொழிலாளர்கள் சென்ட்ரிங், வயரிங், பிளம்மிங், எலக்ட்ரிக்கல் வேலை கள் உட்பட பல பணிகளில் ஈடுபட்டு  வந்தனர். இந்நிலையில், மேற்கண்ட  பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்க ளுக்கு பேசப்பட்ட கூலியை தராமல் மோசடி செய்யும் நோக்கத்தோடு கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 8  மாதகாலமாக இழுத்தடித்து வரு கிறார்.  இதுதொடர்பாக, கட்டிட தொழி லாளர்கள் கடந்த செப். மாதம் உடுமலை காவல்நிலையம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தனித்தனியாக புகார்கள் அளித்தும், தற்போது வரை எந்தவொரு பலனு மில்லை.

ஆகவே, தொழிலாளர்க ளுக்கு சேரவேண்டிய பணத்தை மோச டிசெய்த கட்டிட ஒப்பந்ததாரர் வெங்க டேசனை கைது செய்ய வேண்டும். தொழிலாளருக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். புகார் அளித்து 40க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்த நிலையிலும் எந்த நட வடிக்கையும் எடுக்காத காவல் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத் தினர்  வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்டுமான சங்கத்தின் உடுமலை  தாலூகா தலைவர் கி.கனகராஜ் தலைமை வகித்தார். மாநிலச்செ யலாளர் டி.குமார், தாலூகா செயலா ளர் ஏ.பழனிச்சாமி, சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் எஸ்.ஜெகதீசன், சிஐடியு ஆட்டோ சங்க உடுமலை செயலாளர் கே.பாலதண்டபாணி, மோட்டார் சங்க மாநிலக்குழு சுதா சுப்ரமணியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழுக் கங்களை எழுப்பினர்.