அவிநாசி, செப்.11 - அவிநாசி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதியில் நடை பெறும் குடிமராமத்து பணி களை புதனன்று ஊரக வளர்ச்சித் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கனியாம் பூண்டி, புதுப்பாளையம், சேவூர் மற்றும் பாப்பாங் குளம் ஊராட்சி பகுதிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் ராஜஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், நிர்வாக பொறி யாளர் வெள்ளியங்கிரி, உதவி திட்ட இயக்குநர் கிரி, ஒன்றிய ஆணையாளர் ஹரி கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சாந்திலட்சுமி, பொறியாளர்கள் கோகுல், கணேஷ், மேற்பார்வையாளர்கள் சித்ரா, கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக் குமார், ஊராட்சி செயலர்கள், கண்ணன், பெருமாள், மகாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.