திருப்பூரில் சிஐடியு பனியன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 37ஆவது தலைமை மகாசபை திங்களன்று எம்.சி.மஹாலில் நடைபெற்றது. இதில் 42 ஆண்டுகள் பனியன் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி தற்போது விடுவிக்கப்பட்ட, கே.காமராஜிற்கு பனியன் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் சால்வை அணிவித்தும், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் புத்தகங்களை நினைவுப் பரிசு வழங்கியும் பாராட்டினர். சங்கத்தின் தலைவர் சி.மூர்த்தி, பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.