tamilnadu

அவிநாசி நூற்பாலையில் 18 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

அவிநாசி, ஆக.19- அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள தனியார் நூற்பாலையில்,  18 குழந்தை தொழிலாளர்கள் செவ்வா யன்று மீட்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், இங்கு வளரிளம் சிறார், சிறுமிகள் குழந்தைத் தொழிலாளர்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கிடைத்தது. இதையடுத்து சைல்டு லைன், தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம், காவல் துறை,  வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நூற் பாலையில்  ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 18 சிறுமிகள் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அனைவரும் மீட்கப்பட்டு காப் பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

;