tamilnadu

சக்தி இன்ஜினியரிங் தொழிலாளர்களுக்கு 15 சதவிகிதம் போனஸ் உடன்பாடு

திருப்பூர், நவ. 9- சக்தி இன்ஜினியரிங் தொழிலாளர்களுக்கு 15 சதவிகிதம்  போனஸ் வழங்குவது என உடன்பாடு காணப்பட்டது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பல்லக வுண்டன் பாளையத்தில் சக்தி ஆட்டோ காம்பொனன்ட் லிட்  நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன தொழிலா ளர்களுக்கு இவ்வாண்டிற்கான போனஸ் பேச்சுவார்த்தை மூன்று கட்டமாக நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், ஆலை நிர்வாகத் தரப்பில் முதுநிலை துணைத் தலைவர் பி.முத்துவேலப்பன், தொழில் உறவு மற்றும் நலம் பொது மேலாளர் கே.ஆர்.ராஜேந்திரன், மனிதவளம் மேலாளர் எஸ்.தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல், தொழிற்சங்கத்தின் சார்பில் சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் ஆர்.பழனிசாமி, செயலாளர் ஜெ.கந்தசாமி, பொருளா ளர் வி.காமராஜ், துணைத் தலைவர்கள் கே.கண்னையன், எஸ்.தேவராஜ், துணை செயலாளர்கள் எஸ்.கே.சந்தி ரமூர்த்தி, ஆர்.சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, இந்தாண்டு போனஸ் தொகை 15 சதவிகிதம் வழங்குவது என உடன்பாடு காணப்பட்டது.