மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும் திருப்பத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினர் ஞானசேகரன், ரங்கன், கேசவன், ஜோதி, வீரமணி, காசி, காமராஜ், கோவிந்தம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.