tamilnadu

img

தரமான சாலையமைக்க கோரிக்கை

ஆம்பூர், பிப்.18 -  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது மலை கிராமமான பனங் காட்டுஏரி. ஆம்பூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. மேலும் இந்த மலை கிராமத்திற்கு வனப் பகுதி வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த கிராமத்திற்கு செல்வதற்குவனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.  இந் நிலையில்  வனத்துறை சார்பில் ரூ.90 லட்சம் மதிப் பில் தார்ச்சாலை அமைக்கும் பணி திங்களன்று துவங் கியது. அப்போது தரமான தார்ச்சாலை அமைக்க வில்லை எனக் கூறி கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப் போது உயர் அதிகாரிகள் சாலை அமைப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அது வரை சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.