tamilnadu

img

ஆம்பூர் சாலை விபத்தில் 4 பேர் பலி

ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே  சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. 
தடுப்பு சுவரின் மறுபக்கத்திற்கு சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.