tamilnadu

img

திருப்பத்தூரில் லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி  

திருப்பத்தூரில் சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மின் சரக்கு வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே  பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி சென்று நின்று கொண்டிருந்துள்ளது. அதன்மீது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மினி ட்ரக் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காட்பாடி கலைஞர் பகுதியை சேர்ந்த தீனா, மதன் மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மினி டிராக்கில் இருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விசாரணையில், வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எருதுவிடும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு திரும்பியபோது மினி டிரக் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.  

மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.