tamilnadu

விபத்தில் இளைஞர் பரிதாப பலி

திருநெல்வேலி, மே 26-தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்து பகுதியினை சேர்ந்தவர் கொம்பையா(35). கொத்தனாராக பணி செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு வேனில் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது லோயர்டேம் அருகே ஒரு திருப்பத்தில் வேன் திடீரென நிலை தடுமாறியதில் கொம்பையா தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் கொம்பையாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.