tamilnadu

குடும்ப வன்முறையை தடுக்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்

திருநெல்வேலி. ஜூன் 1- ஊரடங்குகாலத்தில் அனைத்து குடும்பங்க ளுக்கும் ரூபாய்.7500 வழங்க வேண்டும், சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய செய்ய வேண்டும், ஊரக வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும், குடும்ப வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் க்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.  கோரிக்கை மனுவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செய லாளர் பி.கற்பகம்,கனகா. சுந்தரி. சிவா.லெட்சுமி மற்றும் சி.பி.எம்.சேரை ஒன்றிய செயலாளர் கோமதி நாயகம்.வாலிபர் சங்கம் சார்பில் ராஜா ஆகியோர் வழங்கினர் ,சேரை கமிட்டியில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 5 இடங்களிலும், கடையத்தி லும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.

;