tamilnadu

மின்னல் தாக்கி ஒருவர் பலி

திருநெல்வேலி, ஏப்.20-நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்மாசானம்(64). இவர் மாடுமேய்க்கும் தொழில் செய்துவந்தார். தினமும் காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். வழக்கம் போல் வெள்ளியன்று மாசானம் மாடுகளை காட்டுப்பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தபோது மாசானம் மீது மின்னல் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

;