திருநெல்வேலி, ஆக.9- பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது- கடந்த 70 ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இஸ்லா மியர்களுக்கும் பட்டியலினத்தவர் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது, கிறிஸ்த வர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க கோரி தமிழகம் முழுவதும் திங்கட் கிழமை இணையவழி ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. இந்த இணைய வழி ஆர்ப்பாட்டத் திற்கு தமிழக ஆயர் பேரவை தலைவர் தாமஸ் பால்சாமி தலைமை வகிக்கிறார். முன்னாள் தலைவர் நீதி நாதன், தலித் கிறிஸ்தவர் நல்லா இயக்க நிறுவனர் பாஸ்டர் தன்ராஜ், பட்டியலினத்தவர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜா, தேசிய பேரவை பொதுச் செயலாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகிக் கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு ரையாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறி னார். பேட்டியின் போது பாளை மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிர காசம், பாதிரியார் சேவியர் ராஜ், தென் மண்டல தலித் விடுதலை இயக்கத் தலை வர் இலோசியஸ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு பணியக செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அகஸ்டின், ஜார்ஜ் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.