tamilnadu

img

நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கல்

திருநெல்வேலி, ஆக.1- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திரு வேங்கடம் வட்டாரக்குழு சார்பாக சனிக் கிழமை பெருங்கோட்ருர் கிளை இந்திரா காலனி பகுதியில் 200 குடும்பங்களுக்கு ஹோமியோபதி ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி க்கு வாலிபர் சங்க வட்டார செயலாளர் உதய குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட நிர்வாகி பிரபா கரன், சங்க  பெருங்கோட்ருர் கிளை ஆனந்த், கோபி, மனோஜ், சீவல பாண்டியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.